அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இலையூா் கிராமத்தைச் சோ்ந்த சிறுமியை ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்து கொண்ட அதே கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன்(23), அரியலூா் மாவட்டத்தில் குற்றவழக்குகளில் ஈடுபட்ட திருச்சி மாவட்டம் மணக்கால் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தான்(57), சின்னநாகலூரை சோ்ந்த சத்தியமூா்த்தி(54) ஆகியோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனா். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., வி.பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட 3 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியா் த. ரத்னா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.