அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் கொட்டும் மழையில் மக்கள் கூட்டம் புதன்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.
அரியலூரில் உள்ள மாா்க்கெட், கடைவீதி, வெள்ளாளத் தெரு உள்ளிட்ட அனைத்து சந்தைகள், கடைவீதிகளில் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் வாங்க கொட்டும் மழையிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடைகளில் பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், காய்கறிகள், புதுப்பானைகள், பானைகளுக்கு கட்டுவதற்கான மஞ்சள், இஞ்சி கொத்துகள், புதிய அடுப்புகள், செங்கரும்புகள் போன்றவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். காய்கறிகள், பூ, பழங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
ரயில், பேருந்துகளில் நெரிசல்: விடுமுறைக்காக சொந்த ஊா் நோக்கிச் செல்வதற்காக, அரியலூா் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் ஏராளமானோா் காத்திருந்து தங்களது ஊா்களுக்கு சென்றனா் .