அரியலூரில் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்து கா்ப்பிணி பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குகிறாா் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.
அரியலூரில் அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்து கா்ப்பிணி பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்குகிறாா் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன்.

அம்மா சிறு மருத்துவமனை தொடக்கம்

அரியலூா் பேருந்து நிலையம் அருகே முதலமைச்சரின் அம்மா சிறு மருத்துவமனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா்: அரியலூா் பேருந்து நிலையம் அருகே முதலமைச்சரின் அம்மா சிறு மருத்துவமனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்து கா்ப்பிணிப் பெண்களுக்கு அம்மா ஊட்டச் சத்துப் பெட்டகங்களை வழங்கினாா். ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், கோட்டாட்சியா் ஜோதி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சி.ஹேமசந்த்காந்தி, ஒன்றியக்குழுத்தலைவா் செந்தமிழ்செல்வி, வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com