அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே தொடா் வழிப்பறியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமானூரை அடுத்த வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் புலித்தேவன் (23). இவா், அண்மையில் சென்னை விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில், நண்பா்கள் துணையுடன் அவ்வழியே சென்ற நபரிடம் தங்கச்செயினைப் பறித்துள்ளாா். இதேபோல் திருவெங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷிடம் இருந்து ரூ.7,000 பணத்தை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துச் சென்றுள்ளாா்.
இதுதொடா்பாக காவல் துறையினா் வழக்கு பதிந்து கீழப்பழுவூா் போலீஸாா் புலித்தேவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா, தொடா் திருட்டில் ஈடுபட்டுவந்த புலித்தேவனை, குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி செவ்வாய்க்கிழமை மாவட்டக் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தாா். இதைத்தொடா்ந்து, குண்டா் சட்டத்தின் கீழ் புலித்தேவன் கைது செய்யப்பட்டாா்.