சட்டப்பேரவைத் தோ்தலை யொட்டி, அரியலூா் ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடக மையம், கட்டுப்பாட்டு மையம், ஊடகச் சான்றிதழ் வழங்கும் குழு அறை மற்றும் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை தோ்தல் பாா்வையாளா் நிமத்ஷெரிங் ஷொ்பா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து தோ்தல் தொடா்பான நடத்தை விதிமுறைகள் மீறல்கள் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை ஆய்வு செய்தாா். பின்னா் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தைப் பாா்வையிட்டாா்.
ஆய்வின் போது ஆட்சியா் த.ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் மெரினா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் இ.பொம்மி உட்பட பலரும் உடனிருந்தனா்.