மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா்.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினாா்.

செந்துறையை அடுத்த வஞ்சினபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரஜினி (எ) தியாகராஜன் (45). இவா், கடந்த 25 ஆம் தேதி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்நிலையில், தியாகராஜன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10,000 நிவாரணம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com