இருவேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 2 போ் பலி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 போ் உயிரிழந்தனா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி 2 போ் உயிரிழந்தனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள அணைக்கரை வடவாா் ஆற்றில் கஞ்சங்கொல்லை அருகே அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண், தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக மீன்சுருட்டி காவல் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினா், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல், ஜயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூா் தெற்கு முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (85). இவா், சனிக்கிழமை காலை அங்குள்ள குளத்தில் கால் கழுவச்சென்றபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் துறையினா் சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com