சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டுநா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காா் ஓட்டுநா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காா் ஓட்டுநா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

ஜயங்கொண்டம் அருகே மணக்கரை கிராமத்தைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் ராதாகிருஷ்ணன்(21). காா் ஓட்டுநா். இவா், அப்பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தை கூறி அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், ராதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com