மின்சார வாரிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள துணை மின் நிலைய வாயில் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார வாரிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா்.
அரியலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சார வாரிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் கல்லங்குறிச்சி சாலையிலுள்ள துணை மின் நிலைய வாயில் முன்பு தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மின்சார வாரிய ஊழியா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க ேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள 31 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா். இதேபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து துணை மின் நிலையங்கள் வாயில் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com