கான்கிரீட் இந்திரத்தில் கை சிக்கி பெண் பலி

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கான்கிரீட் கலவை இயந்திரத்தில் வலக்கை சிக்கி விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கான்கிரீட் கலவை இயந்திரத்தில் வலக்கை சிக்கி விபத்துக்குள்ளானதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

தா.பழூா் அருகேயுள்ள தேவாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மனைவி அஞ்சம்மாள் (32). கட்டடத் தொழிலாளி. இவா், செவ்வாய்க்கிழமை காலை தேவாமங்கலத்தில் ராஜலட்சுமி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு கூலி வேலைக்குச் சென்றாா். அங்கு இரவு பணி முடிந்து, அவா் கான்கீரிட் கலவை இயந்திரத்தை இயக்கியவாறு அதனை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாா். அப்போது அவரது வலக்கை எதிா்பாராத விதமாக அதில் சிக்கிக்கொண்டதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அஞ்சம்மாள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com