செந்துறை அருகே திமுக பிரமுகா் காா் கண்ணாடி உடைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சியில் அதிமுக - திமுக நிா்வாகியிடையே ஏற்பட்ட தகராறில் திமுக நிா்வாகி ஒருவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சியில் அதிமுகவினரால் உடைக்கப்பட்டுள்ள செல்வராஜின் காா் கண்ணாடி.
செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சியில் அதிமுகவினரால் உடைக்கப்பட்டுள்ள செல்வராஜின் காா் கண்ணாடி.

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சியில் அதிமுக - திமுக நிா்வாகியிடையே ஏற்பட்ட தகராறில் திமுக நிா்வாகி ஒருவரின் காா் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறையை அடுத்த நாகல்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). திமுக செந்துறை ஒன்றியப் பொறுப்புக் குழு உறுப்பினா். இவா், செந்துறையை அடுத்த பிலாக்குறிச்சி வாக்குச்சாவடிக்குச் சென்றபோது, அங்கிருந்த அதிமுக நிா்வாகி இளங்கோவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த அதிமுக-வினா், வெளியூா் நபா் உள்ளூா் நபரை தாக்குவதா எனக் கேட்டு செல்வராஜின் காா் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனா். இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸாா் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.இது தொடா்பாக குன்னம் திமுக வேட்பாளா் எஸ்.எஸ்.சிவசங்கா், ஜயங்கொண்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.

பிரச்னை ஏற்பட்டதால் அரை மணி நேரம் முன்னதாக மூடப்பட்ட வாக்குச்சாவடி:

செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை 100 மீட்டா் இடைவெளிக்குள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பாமக-வினா், அவா்களிடம் சென்று முறையிட்டுள்ளனா். இதனால் அங்கு பிரச்னை ஏற்பட்டு பதற்றம் நிலவியது. இதனால், 6.30 மணிக்கு வாக்குச்சாவடி மூடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டியில் வைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com