அரியலூா், தேளூா், செந்துறை ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (ஏப். 22) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால், அரியலூா் ஒரு பகுதி மற்றும் கயா்லாபாத், ராஜீவ் நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூா், பாலம்பாடி, கல்லங்குறிச்சி, பொய்யாதநல்லூா், தாமரைக்குளம், தேளூா், நாகமங்கலம், விக்கிரமங்கலம், குணமங்கலம், வெளிப்பிரிங்கியம் மற்றும் செந்துறை பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் பொ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.