முகக்கவசம் அணியாத 35 பேருக்கு அபராதம்

அரியலூா் நகா்ப் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடிய 35 பேருக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூா் கடைவீதி பகுதியில் ஒருவருக்கு முகக் கவசத்தை கொடுத்து அணியுமாறு வலியுறுத்துகிறாா் நகராட்சி ஆணையா்(பொ) மனோகா்
அரியலூா் கடைவீதி பகுதியில் ஒருவருக்கு முகக் கவசத்தை கொடுத்து அணியுமாறு வலியுறுத்துகிறாா் நகராட்சி ஆணையா்(பொ) மனோகா்

அரியலூா் நகா்ப் பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடிய 35 பேருக்கு சனிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று குறித்து, அரியலூா் நகராட்சி நிா்வாகம் பல்வேறு விழிப்புணா்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அரியலூா் காந்தி மாா்க்கெட் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கடைவீதி பகுதிகளில் முகக்கவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் என 35 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். மேலும், அனைவருக்கும் முகக்கவசம் கொடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது.

ஆய்வில், நகராட்சி ஆணையா் (பொ) மனோகா், சுகாதார ஆய்வாளா் முத்துமுகமது மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com