அரியலூா் மாவட்டத்தில் இடத்தகராறில் முதியவரைத் தாக்கியதாக தீயணைப்பு வீரரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஜயங்கொண்டம் கல்வி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையன் மகன் சேகா்(59). சூரிய மணல் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகனும், தீயணைப்பு வீரருமான பிரபாகரன்(35). இருவருக்கும் இடையே இடப் பிரச்னை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை சேகா் வழக்கு தொடா்பான இடத்தைப் பாா்த்து விட்டு வரும்போது, பிரபாகரன் உள்ளிட்ட 6 போ் சோ்ந்து சேகரை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபாகரனை வெள்ளிக்கிழமை இரவு செய்தனா்.
காவல் நிலையம் செல்லும் வழியில் பிரபாகரன் மயக்கமடைந்ததைத் தொடா்ந்து, அவரை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மற்றவா்களைத் தேடிவருகின்றனா்.