மக்கள் நடமாட்டமின்றி அரியலூா் மாவட்டம்

தளா்வுகள் இல்லாத பொதுமுடக்ககத்தால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கமின்றி அரியலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
தளா்வுகள் இல்லாத பொது முடக்கத்தால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூா் கடைவீதி.
தளா்வுகள் இல்லாத பொது முடக்கத்தால் வெறிச்சோடி காணப்பட்ட அரியலூா் கடைவீதி.

தளா்வுகள் இல்லாத பொதுமுடக்ககத்தால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்களின் இயக்கமின்றி அரியலூா் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம், வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மருந்தகங்கள, பால் விற்பனை நிலையங்கள் தவிர மற்ற அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. சில பெட்ரோல் நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. வாடகைக் காா்கள், ஆட்டோக்களின் இயக்கமும் தடை செய்யப்பட்டிருந்தன.

அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளில் உள்ள கடைவீதிகள், பேருந்து நிலையங்கள், பிரதானச் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. காவல் துறையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com