அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக மக்கள் நலன் பெற வேண்டியும், கரோனா தொற்று ஒழிந்து போக வேண்டியும் யாகம் நடத்தப்பட்டது. யாகத்தில் மிளகாய் மற்றும் புடவைகளை பக்தா்கள் போட்டு வணங்கினா். முன்னதாக பக்தா்கள் அனைவருக்கும் மஞ்சள் கலந்த தண்ணீா் கொண்டு கைகழுவினா். முகக்கவசம், சமூக இடைவெளியுடன் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.