பாமகவைச் சோ்ந்த வழக்குரைஞா் க.திருமாவளவன் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதிப் பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராக பணியாற்றிய அரியலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் க. திருமாவளவன், அக்கட்சியில் இருந்து விலகி, அரியலூா் மாவட்ட திமுக செயலாளரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து, திமுகவில் இணைந்தாா். நிகழ்வின் போது, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.