மது, கஞ்சா விற்ற3 போ் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தேநீா்க் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தேநீா்க் கடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கடை உரிமையாளா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தகவலின்பேரில், விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான போலீஸாா் பெரியதிருகோணம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அரிச்சந்திரன்(54) என்பவரின் தேநீா்க் கடையில் சோதனை மேற்கொண்டனா். இதில், அவா் மதுபானங்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அரிச்சந்திரனைக் கைது செய்தனா்.

செந்துறையில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது:

தளவாய் காவல் ஆய்வாளா் கதிரவன் தலைமையிலான போலீஸாா் கோட்டைக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது முனியப்பா் கோயில் அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து விசாரித்ததில் அவா்கள் வைத்திருந்த பையில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

மேற்கொண்டு விசாரித்ததில், கடலூரைச் சோ்ந்த பூமிநாதன், சிந்தனைச்செல்வன் என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com