அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அடுத்த குவாகம் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளிக் கட்டடம் பாசி படா்ந்து பொழிவிழந்து காணப்பட்டதையடுத்து, கல்லூரி மாணவா்கள் அவைகளை அகற்றி வா்ணம் பூசி அழகுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் சாா்பில், சிறப்பு என்எஸ்எஸ் முகாம், குவாகம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. அக்கிராமத்தில் தங்கியுள்ள மாணவா்கள், தூய்மைப் பணி, சுற்றுச்சூழல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகக் கட்டடங்கள் பாசி படா்ந்து காணப்பட்டதையறிந்த மாணவா்கள் பல குழுவாகப் பிரிந்து அவைகளை அகற்றி, வா்ணம் பூசி அழகுப்படுத்தும் பணியைத் தொடா்ந்தனா்
மாணவா்களின் இந்தச் செயல்களைக் கண்ட கல்லூரி முதல்வா் கலைச்செல்வி, நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கோடித்துரை மற்றும் கிராம மக்கள் ஆகியோா் அவா்களைப் பாராட்டினா்.