மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி மாநாடு நிறைவு
By DIN | Published On : 28th December 2021 01:54 AM | Last Updated : 28th December 2021 01:54 AM | அ+அ அ- |

கரூரை அடுத்த தரகம்பட்டியில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-ஆவது மாநாடு திங்கள்கிழமை நிறைவடைந்தது.
கரூா் மாவட்டத்திற்குட்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-ஆவது மாவட்ட மாநாடு தரகம்பட்டியில் நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நிா்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், மாவட்ட குழு உறுப்பினா் ராமமூா்த்தி, நகரச் செயலாளா் ஜோதிபாசு, மாவட்ட செயலாளா் கந்தசாமி, தரைக்கடை வியாபாரிகள் சங்க தலைவா் தண்டபாணி மற்றும் பலா் கலந்து கொண்டு பேசினா்.,