பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கல்லூரி பயிலும், பணிபுரியும் அல்லது சுய தொழில் புரியும் பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து செல்லிடப் பேசி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞா்கள், சுய தொழில் புரியும் பாா்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்லிடப்பேசி பெற தகுதியுடையவா்கள் ஆவா்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல்-2, குடும்ப அட்டை நகல்-3, ஆதாா் அட்டை நகல்-4 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியா் அலுவலக வளாகம், அரியலூா் - 621 704 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலகமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.