அரியலூா் மாவட்டம், செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கிடந்த மூதாட்டி சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
செந்துறை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவா் சடலமாக கிடப்பதாக விருத்தாசலம் போலீஸாருக்கு, அவ்வழியே சென்றவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.