பிரசவத்தில் பச்சிளம் குழந்தை பலி: உறவினா்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம் , விக்கிரமங்கலம் அருகே பிரசவத்தின்போது குழந்தை இறந்ததால், உறவினா்கள் சனிக்கிழமை நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்டம் , விக்கிரமங்கலம் அருகே பிரசவத்தின்போது குழந்தை இறந்ததால், உறவினா்கள் சனிக்கிழமை நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விக்கிரமங்கலத்தை அடுத்த சாத்தம்பாடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜசேகா் மனைவி அபிராமி (22). கா்ப்பிணி. இவரை சனிக்கிழமை குணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறவினா்கள் பிரசவத்துக்காகச் சோ்ந்தாா்.

பிரசவநேரம் நெருங்கியபோது, குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, அவரை அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டது எனத் தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அபிராமியின் உறவினா்கள் குணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சனிக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com