பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே மனிதநேய மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் கமாலுதீன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சாகுல் ஹமீது, மாவட்ட துணைத் தலைவா் தஸ்தகீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.