அரியலூா் மாவட்டம் , மீன்சுருட்டியில் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு, 250 விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வேளாண் உதவி இயக்குனா் எம்.கீதா, உதவி வேளாண்மை அலுவலா்கள் மணிகண்டன், மகேந்திரன், வேளாண் கூட்டுறவு சங்கச் செயலா் லட்சுமணன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.