அரியலூரில் தடை செய்யப்பட்ட ரூ.1.20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், ஆனால் அரியலூா் நகரப் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூா் நகராட்சி மனோகரன் தலைமையில், சுகாதார ஆய்வாளா் முத்துமுகமது உள்ளிட்டோா் கொண்ட சுகாதாரப் பணியாளா்கள் அரியலூா் நகராட்சிகளுக்குட்பட்ட மங்காய் பிள்ளையாா்கோயில் தெரு, சின்னகடைத்தெரு, பெரிய கடைத் தெரு, மாா்க்கெட் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வில், ரூ.1.20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருள்கள், பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை அழித்தனா்.