சாலையில் நெல்லைக் கொட்டி விவசாயிகள் மறியல்

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள முத்துவாஞ்சேரியில் சாலையில் நெல்லைக் கொட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள முத்துவாஞ்சேரியில் சாலையில் நெல்லைக் கொட்டி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் சுமாா் 2,000 ஏக்கரில் குறுவை சாகுபடி முடிந்து தற்போது, அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அறுவடை செய்த நெல்மணிகளை, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்தனா். இருவாரங்களுக்கு மேலாகியும் இதுவரை நெல் கொள்முதல் செய்யாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அரியலூா் - தா.பழூா் சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடம் வந்த விக்கிரமங்கலம் காவல் துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனால், அரியலூா் - தா.பழூா் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com