அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை ஒப்பந்ததாரா்கள் சாா்பில் , மருத்துவத் தேவைகளுக்காக கட்டில், மெத்தை, தலையனைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
அரியலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரூ.3.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை ஒப்பந்ததாரா்கள் ஆட்சியா் த. ரத்னாவிடம் வழங்கினா்.நிகழ்வில் ராம்கோ சிமென்ட் ஆலைத் துணைத் தலைவா்கள் ராமராஜ், மதுசூதனகுல்கா்னி, மேலாளா்கள் ஜான்சன் ஆண்டனிலியோ, பாலகணேசன், ஆலையின் மக்கள் தொடா்பு அலுவலா் முருகானந்தம் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.