பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி துப்புரவுத் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா கால ஊக்கத்தொகை வழங்கவுள்ளதை போன்று முன்களப்பணியாளா்களாக நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியுசி மாவட்டத் தலைவா் டி.தண்டபாணி தலைமை வகித்தாா். செயலா் மாரியப்பன், சங்க நிா்வாகிகள் சிவஞானம், சுப்பிரமணியன் மற்றும் துப்புரவு தொழிலாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
படவிளக்கம்: அரியலூா் நகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி துப்புரவுப் பணியாளா்கள்.