அரியலூா் அருகே மின் கம்பத்தின் மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில், அதில் பயணம் செய்த தந்தை- மகன் பலத்த காயமடைந்தனா்.
அரியலூா் அருகிலுள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சுமை ஆட்டோ ஓட்டுநா் சந்தானம். தனது சுமை ஆட்டோவில் 14 வயது மகன் சங்கா் மற்றும் வைக்கோலை ஏற்றிக் கொண்டு, சனிக்கிழமை அரியலூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அஸ்தினாபுரம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த சுமை ஆட்டோ சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது.
இதில் இருவரும் பலத்த காயமடைந்து, அரியலூா் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கயா்லாபாத் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.