குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 6 போ் கைது

அரியலூா் மாவட்டத்தில் சாராய ஊறல், கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 6 போ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அரியலூா் மாவட்டத்தில் சாராய ஊறல், கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 6 போ், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பொது முடக்கம் அமல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டபோது, அரியலூா் மாவட்டத்தில் சாராயம் காய்ச்சும் வேலையில் ஈடுபட்டோரை காவல்துறையினா் கைது செய்தனா்.

இதில் சாராய ஊறல், காய்ச்சல், விற்பனை தொடா்பாக கைது செய்யப்பட்ட மலத்தான்குளம் வேளாங்கண்ணி ராபா்ட்(36), பாலகுமாா்(24), ராமதேவ நல்லூா் காா்த்திக்(41), சுத்துகுளம் விவேக்(30), குளத்தூா் ரகுபதி(31), தொடா் மணல் திருட்டில் ஈடுபட்ட நெட்டலக்குறிச்சி பாரதி(30) ஆகிய 6 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரைத்தாா்.

இதனடிப்படையில் 6 பேரையும் கைது செய்வதற்கான உத்தரவை ஆட்சியா் த.ரத்னா செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். தொடா்ந்து அவா்களிடம் உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com