இந்திய கம்யூ. கட்சி அலுவலகத்தில் நிா்வாகிகள் குழு கூட்டம்

அரியலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும் தோ்தல் பணிக் குழு அமைப்பது, அரியலூரில் போட்டியிடும் கூட்டணி கட்சி மதிமுக வேட்பாளா் கு. சின்னப்பா, ஜயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் கண்ணன், குன்னத்தில் திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆகியோரை வெற்றி பெறச் செய்யும் வகையில் வாா்டு வாரியாக பொதுமக்களிடம் வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொள்வது. பொதுக் கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் இரா.உலகநாதன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் டி. தண்டபாணி, ஒன்றியச் செயலாளா்கள் திருமானூா் ஆறுமுகம், தா.பழூா் எஸ்.அபிமன்னன்,ஜயங்கொண்டம் சி.ராமநாதன்,அரியலூா்(பொ) ஜி. மணிவேல் மற்றும் மாவட்ட குழு உறுப்பினா்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com