அரியலூா் மாவட்டம், தா. பழூரில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், பேருந்துப் பயணிகளுக்கு அபராதம் விதித்தனா்.
தா.பழூரை அடுத்த சிந்தாமணி கிராமத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் நடராஜன் தலைமையில் ஊராட்சி அலுவலா்கள் இருசக்கர வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணிப்பவா்கள் முகக் கவசம் அணிந்து செல்கின்றனரா என ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம், லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிவந்த 12 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து, ரூ.2,400 வசூல் செய்தனா். மேலும், அவா்களுக்கு கரோனா பரவல் விழிப்புணா்வு ஏற்படுத்தியதுடன், முகக்கவசம் கொடுத்து அனுப்பிவைத்தனா்.