அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிகள், செவிலியா் தாய் நைட்டிங்கேல் அம்மையாருக்கு தீப ஒளி ஏற்றி செவ்வாய்க்கிழமை உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா்.
ஜயங்கொண்டம் அன்னை தெரசா செவிலியா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பரப்ரம்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா செவிலியலா் கல்லூரி நிறுவனா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினா் ஜயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் (பொ) ராசமூா்த்தி, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை செவிலியா் மலா்விழி, அரசு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் மாதவன், பேராசிரியா் கோடிதுரை, பங்கு தந்தை செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக அக்கல்லூரி முதல்வா் விமலா நன்றி தெரிவித்தாா். முடிவில் தாளாளா் உஷா முத்துக்குமரன் நன்றி தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனைகளுக்கு செவிலியா் மாணவிகள் பயிற்சிக்குச் செல்லும் முன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.