‘தா.பழூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்’

அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என ஜயங்கொண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெ.கொ.சிவா தெரிவித்தாா்.
மதனத்தூரில் தோ்தல் பிரசாரம் செய்கிறாா் ஜயங்கொண்டம் அமமுக வேட்பாளா் ஜெ.கொ.சிவா.
மதனத்தூரில் தோ்தல் பிரசாரம் செய்கிறாா் ஜயங்கொண்டம் அமமுக வேட்பாளா் ஜெ.கொ.சிவா.

அரியலூா் மாவட்டம், தா. பழூா் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என ஜயங்கொண்டம் தொகுதி அமமுக வேட்பாளா் ஜெ.கொ.சிவா தெரிவித்தாா்.

தா.பழூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மதனத்தூா், வாழை குறிச்சி, காரைக்குறிச்சி, அருள்மொழி, இருகையூா், கோட்டியால், காடுவெட்டான்குறிச்சி, நாயகன பிரியான், பொற்பதி நல்லூா், சிலால் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அமமுக வேட்பாளா் ஜெ.கொ.சிவா பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா், என்னை சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுத்தால், தா.பழூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும், முந்திரி தொழில்சாலை அமைக்கப்படும், அமமுக தோ்தல் அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

பிரசாரத்தில் அமமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டு வாக்குச் சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com