துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், திருமானூரில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமானூரில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.
திருமானூரில் நடைபெற்ற துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரியலூா் மாவட்டம், திருமானூரில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக அரியலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், ஆயுதப் படை துணை கண்காணிப்பாளா் மனவாளன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இந்த கொடி அணி வகுப்பு, திருமானூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடங்கி கடைவீதி வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. காவல் நிலைய ஆய்வாளா்கள் திருமானூா் விஜயகுமாா், கீழப்பழுவூா் சகாயம்அன்பரசன் மற்றும் துணை ராணுவப் படையினா் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com