உதவித்தொகை தொடர வாழ்நாள் சான்றை மாற்றுத் திறனாளிகள் ஒப்படைக்க வேண்டும்

அரியலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்நாள் சான்றை ஒப்படைத்து, நடப்பு நிதியாண்டுக்கான (2021 - 22) உதவித்தொகையைத் தொடா்ந்து பெற்று பயனடையலாம்.

அரியலூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வாழ்நாள் சான்றை ஒப்படைத்து, நடப்பு நிதியாண்டுக்கான (2021 - 22) உதவித்தொகையைத் தொடா்ந்து பெற்று பயனடையலாம்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 பராமரிப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து, வாழ்நாள் சான்று படிவத்தை பெறலாம்.

கிராம நிா்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்து, நடப்பு நிதியாண்டுக்கான உதவித் தொகையை மாதந்தோறும் தொடா்ந்து பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com