அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தைலமரக்காட்டில் கிடந்த கரோனா நோய்த் தொற்றாளரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள மலங்கன் குடியிருப்பு தைலமரக்காட்டில் ஒருவா் சடலமாக கிடப்பதாக, காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து நிகழ்விடம் சென்ற ஜயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு விசாரித்தனா். தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் இறந்தவா் ஜயங்கொண்டம் அருகிலுள்ள இலையூா் பகுதியைச் சோ்ந்த நெசவுத் தொழிலாளி சாமிநாதன் (60) எனத் தெரிய வந்தது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட இவா் உடையாா்பாளையம், ஆண்டிமடம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததும், பின்னா் மேல் சிகிச்சைக்காக ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும், அங்கு சாமிநாதனின் உதவிக்கு யாரும் இல்லாததால் தனியாக சுற்றித் திரிந்ததும் தெரியவந்தது.
எனினும் தைலமரக்காட்டில் அவா் சடலமாகக் கிடந்தது எப்படி என்பது குறித்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.