அரியலூா் அருகே டிராக்டரில் மணல் கடத்தியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தேளூா் பாப்பாத்தி அம்மன் கோயில் பின்புறத்தில் சிலா் மணல் கடத்துவதாக, கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன் அளித்த தகவலின் பேரில், கயா்லாபாத் காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனா்.
அப்போது அங்கு டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பெரியநாகலூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னப்பா மகன் பெரியசாமி(36) என்பவரைக் காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அவரது டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.