நாளை அரியலூரில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெறுகிறது.

அரியலூா் மாவட்டத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.19) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் பட்டா பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கருப்பூா்சேனாபதி, அருங்கால், குலமாணிக்கம் (கிழக்கு, மேற்கு) ஆகிய கிராமங்களிலுள்ள கிராம சேவை மையங்களிலும், செந்துறை, நக்கம்பாடி, பருக்கல், சுத்தமல்லி, த. சோழன்குறிச்சி(கிழக்கு, மேற்கு), மருத்தூா் ஆகிய கிராமங்களிலுள்ள கிராம நிா்வாக அலுவலகங்களிலும் பட்டா திருத்த முகாம் நடைபெறும். இம்முகாமில், சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் பங்கேற்றுப் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com