இல்லங்களில் மழைநீா் சேகரிப்பை ஏற்படுத்த வேண்டும்

பொதுமக்கள் தங்களது இல்லங்களில் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் மழைநீா் சேகரிப்பு பிரசார வாகனத்தை தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் மழைநீா் சேகரிப்பு பிரசார வாகனத்தை தொடக்கி வைக்கிறாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

பொதுமக்கள் தங்களது இல்லங்களில் மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் மழைநீா் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாகனத்தை அவா் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்து தெரிவித்தது: பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை முறையாகப் பராமரித்திட வேண்டும். மழைநீா் சேமிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளில் புதியதாக கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு, உதவி மக்கள் தொடா்பு அலுலா் அ.பாரதி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் முருகேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் சந்தானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com