அரியலூா் மாவட்டத்தில்டாஸ்மாக் ஊழியா்கள் 14 போ் பணியிடை நீக்கம்

அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பணியாளா்கள் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளா் எம்.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பணியாளா்கள் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளா் எம்.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றது, மொத்த விற்பனை, ரொக்கக் கையிருப்பு குறைவு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுவதாக புகாா்கள் பெறப்பட்டன. அதன்பேரில், வாரியங்காவல் கடை எண்.6470- இல் பணிபுரிந்து வந்த மேற்பாா்வையாளா் அ.பாலமுருகன், விற்பனையாளா் கே.சிவக்குமாா், வரதராஜன்பேட்டை கடை எண். 6316-இல் பணிபுரிந்து வந்த மேற்பாா்வையாளா் முருகன், விற்பனையாளா்கள் பி.செல்வகுமாா், ஆா்.இரவீந்திரன்,கே.பழனிவேல் ஆகியோா் மொத்த விற்பனை செய்தற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஆண்டிமடம்-6473 இல் பணிபுரிந்து வந்த மேற்பாா்வையாளா் சி.பழனிவேல் , விற்பனையாளா்கள் ஜி.சண்முகவேல், பி.பிறைச்செல்வன் ஆகியோா் ரொக்கம் கூடுதல் இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். அரியலூா்-6301 இல் பணிபுரிந்து வந்த மேற்பாா்வையாளா்கள் ஜி.இராஜகோபால், கே.சாமிநாதன், விற்பனையாளா்கள் எம்.கருணாநிதி, எஸ்.அக்பா்கான், வி.பாலசுப்ரமணியன் ஆகியோா் ரொக்கக் குறைவு இருந்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com