மழையால் வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 3 பசுக்கள் பலி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பலத்த மழை பெய்தபோது, வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 3 பசுக்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பலத்த மழை பெய்தபோது, வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 3 பசுக்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள இடையாறு கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி(50). இவா் சனிக்கிழமை அதே கிராமத்தில் உள்ள ஒருவரது வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென மழை பெய்ததால், வயலின் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவா் ஓரமாக பசுக்களுடன் ஒதுங்கினாா்.

நீண்ட நேரம் மழை பெய்ததன் காரணமாக, வீட்டின் சுற்றுச்சுவா் ஈரமாகி குலைந்து திடீரென இடிந்து விழுந்தது. இதில், ராமமூா்த்தியின் 4 மாடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டன. அவைகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த பொதுமக்கள் இடிபாடுகளை அகற்றிப் பாா்த்தபோது, 2 சினை பசு மாடுகள் உள்ளிட்ட 3 பசுக்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

மேலும், பலத்த காயமடைந்த 1 பசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் 3 பசுக்கள் உயிரிழந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com