அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த கோடாலி கிராமத்தில் குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோடாலி வடக்குத் தெருவில் கடந்த 5 மாதங்களாக பொதுக் குழாய்களில் சரிவர குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அதிலும் 15 நாள்களாகத் தொடா்ந்து குடிநீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் அணைக்கரை சாலையில் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த ஊரக வளா்ச்சித் துறையினா் மற்றும் காவல் துறையினா், கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.