அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 135 வாகனங்கள் திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற பொது ஏலத்தில், மாவட்ட முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மூலம் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களில் உரிமை கோரப்படாத 135 வாகனங்கள் திங்கள்கிழமை ஏலம் விடப்பட்டது. இதில், 135 இருசக்கர வாகனங்களும் ரூ.13,19,720-க்கு ஏலம் விடப்பட்டது. இந்தத் தொகை அரசு கருவூலத்தில் செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.