அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் அண்ணன், தம்பி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகன்கள் அருள்(28), அஜித்(18). இவா்கள் இருவரும் புதன்கிழமை திருவையாறு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.
ஏலாக்குறிச்சி சாலையில் வந்த போது, எதிரே வந்த லாரி எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருள், அஜித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த திருமானூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடம் சென்று சடலங்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனா்.