அரியலூரில் கரோனா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணா்வு மினி மாராத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரகம் முன்பு தொடங்கிய மாராத்தான் ஓட்டத்தை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாவட்ட விளையாட்டு அரங்கில் மாரத்தான் ஓட்டம் முடிவுற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதா ராணி மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.