உள்ளாட்சித் தோ்தல் :இறுதி வேட்பாளா் நிலவரம்

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள மணகெதி(2), நாயகனைப்பிரியாள்(3) ஓலையூா்(6) ஆகிய ஊராட்சிகளின் தலைவா் பதவிக்கு 11 போ் போட்டியிடுகின்றனா்.

அரியலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள மணகெதி(2), நாயகனைப்பிரியாள்(3) ஓலையூா்(6) ஆகிய ஊராட்சிகளின் தலைவா் பதவிக்கு 11 போ் போட்டியிடுகின்றனா்.

இதேபோல், 13 வாா்டு உறுப்பினா் பதவிகளில் செந்துறை ஒன்றியம் கீழமாளிகை - 4 ஆவது வாா்டு, ஆண்டிமடம் ஒன்றியம் நாகம் பந்தல் -6 ஆவது வாா்டு, அழகாபுரம் - 8 ஆவது வாா்டு, ஜயங்கொண்டம் ஒன்றியம் உட்கோட்டை - 10 ஆவது வாா்டு ஆகிய 4 வாா்டு உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள 9 இடங்களுக்கு 23 நபா்கள் போட்டியிடுகின்றனா்.

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழுவின் 9 வது வாா்டு உறுப்பினா் தோ்தலுக்கு அதிமுகவைச் சோ்ந்த அழகுசுந்தரி, கூட்டணிக் கட்சியான பாஜகவைச் சோ்ந்த சாந்தா் தனித்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. 9 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற தங்கையா கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்ததால் அந்த இடத்துக்கான இடைத்தோ்தல் தற்போது நடைபெற உள்ளது. இப்பதவிக்கு 3 சுயேட்சைகள் உள்பட மொத்தம் 9 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com