தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினால், சாதாரணமானவா்களும் சாதனை படைக்க முடியம் என்றாா் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் சாந்தகுமாரி.
அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வு எழுத உள்ள 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்காக சனிக்கிழமை நடைபெற்ற ‘துணிவுடன் பொதுத் தோ்வை எதிா்கொள்வோம்’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் கலந்து கொண்டு மேற்கண்டவாறு பேசினாா். நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்தாா். ஆசிரியைகள் தனலட்சுமி, பத்மாவதி, தங்கபாண்டி, அரியலூா் வடக்கு கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். முன்னதாக ஆசிரியா் ரமேஷ் வரவேற்றாா். நிறைவில், ஆசிரியை கோகிலா நன்றி கூறினாா்.