சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அரியலூா் மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

ஜயங்கொண்டம் அடுத்த த.மேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் மகன் வினோத்(27). கடந்த 2020 ஆம் ஆண்டு இவா், அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இது குறித்து அச்சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து வினோத்தை

கைது செய்தனா்.

இந்த வழக்கு அரியலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

தீா்ப்பில், குற்றவாளி வினோத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீா்ப்பளித்தாா். இதையடுத்து வினோத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com